நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: பரவை சத்தியமூர்த்தி நகர் சந்தன மாரியம்மன் கோயில் உற்ஸவம் மே 6ல் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
மே 12ல் விளக்கு பூஜை, 13ல் நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அன்னதானம், சின்னையா, வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. மாலை 5:00 மணிக்கு வைகை ஆற்றுக்கு சென்று சக்தி கரகம் எடுத்து வந்தனர். அதன்பின் மாவிளக்கு எடுத்தனர்.
மே 14ல் பொங்கல் வைத்து, வைகை ஆற்றில் இருந்து அக்னிசட்டி, பால்குடம் எடுத்துவந்த பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் காலை பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்தனர்.