
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: நல்லுத்தேவன்பட்டி அருகே உள்ள நாலுகரை மக்களுக்கு பாத்தியப்பட்ட துர்க்கையம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடந்தது.
நல்லுத்தேவன்பட்டியில் இருந்து பெட்டி எடுத்துக் கொண்டு, பக்தர்கள் பொங்கல் பானையுடன் துர்க்கையம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று லிங்கநாயக்கன்பட்டி மந்தையில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.