/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பால வேலை தொடங்கியாச்சு; வாகனங்களால் நெரிசலாச்சு
/
பால வேலை தொடங்கியாச்சு; வாகனங்களால் நெரிசலாச்சு
ADDED : பிப் 23, 2024 06:23 AM
திருமங்கலம் : திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் மேம்பாலத்திற்கான துாண்கள் அமைக்க பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கப்பலுார் ரிங் ரோட்டில் டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க வலையங்குளம் பகுதியில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், பள்ளி பஸ்கள் நேற்று இந்த வழியாக கடந்து சென்றன.
கட்டுமான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் டூவீலர் மட்டுமே செல்லவே பாதை வசதி உள்ளது. கனரக வாகனங்களும் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பால பணிகள் முடிவடையும் வரை தடை விதிக்க வேண்டும். வாகனங்கள் செல்வதற்கு மாற்று பாதையை உடனடியாக அறிவிக்க வேண்டும்.