/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வளர்த்த பயிரும் கருகி போச்சு வாழ்வும் கேள்விக்குறியாச்சு
/
வளர்த்த பயிரும் கருகி போச்சு வாழ்வும் கேள்விக்குறியாச்சு
வளர்த்த பயிரும் கருகி போச்சு வாழ்வும் கேள்விக்குறியாச்சு
வளர்த்த பயிரும் கருகி போச்சு வாழ்வும் கேள்விக்குறியாச்சு
ADDED : டிச 15, 2025 05:40 AM

மேலுார்: குழிச்சேவல்பட்டியில் நேரடி பாசனத்திற்கு தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
குழிச்சேவல் பட்டிக்கு 11 வது கால்வாய் 9 வது மடை வழியாக வரும் தண்ணீரால் சின்னப்பனையன், இடையன் கண்மாய் உள்ளிட்ட 7 கண்மாய்களும், நேரடி பாசனமாக நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலமும் பயன்பெறும். நெல் பயிரிட்டு 70 நாட்கள் ஆன நிலையில் 15 நாட்கள் தண்ணீர் வராததால் பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளது.
விவசாயி சக்திவேல்: கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் செலவு செய்தேன். இப்பகுதிக்கு தண்ணீர் வராததால் ஏராளமான ஏக்கர் வயலில் வெடிப்பு ஏற்பட்டு, பயிர்கள் சாய்ந்து, கருக ஆரம்பித்துள்ளது. தவிர தண்ணீரின்றி பயிர்கள் வளர்ச்சி பாதித்துள்ளது. தண்ணீர் கேட்டு நீர்வளத்துறை அலுவலகத்தில் முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் தினமும் அலைக்கழிக்கின்றனர். விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாததால் சொசைட்டியில் வாங்கிய கடனை கட்ட முடியாமலும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருவதால் மாவட்ட நிர்வாகம் பாசனத்திற்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

