/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இருளில் மூழ்கியது கொண்டுரெட்டிபட்டி
/
இருளில் மூழ்கியது கொண்டுரெட்டிபட்டி
ADDED : ஏப் 05, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: டி.கல்லுப்பட்டி ஒன்றியம் முத்துலிங்காபுரம் ஊராட்சி கொண்டுரெட்டிபட்டியில் மூன்று மாதமாக தெருவிளக்கு எரியாததால் இருளில் மூழ்கியுள்ளது.
இதனால் இரவு 7:00 மணிக்கு மேல் தெருக்களில் நடமாட முடியாத அவல நிலையில் இப்பகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் உள்ளனர். அவர்கள் கூறுகையில், ''தெருவிளக்குகள் பழுதானதை பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரையூர் - டி. கல்லுப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் வேகத்தடைகள் பல உள்ளன. இருளில் மூழ்கி இருப்பதால் டூவீலரில் செல்வோர் தடை இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைகின்றனர். தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என்றனர்.

