ADDED : ஆக 28, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி போதை ஒழிப்புப் பிரிவு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், மனித சங்கிலி, சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் துவக்கி வைத்தார். கருத்தரங்கில் பிரம்ம குமாரிகள் இயக்க ராஜ யோக மையம் ஆசிரியர் மீரா பேசினார். மத்திய அரசின் நாசா முக்த் பாரத் அபியான் போர்டலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து போதைக்கு எதிரான தன்னார்வலர்களாக தங்களை பதிவு செய்து கொண்டனர். பேராசிரியர்கள் விஜயகுமார், ராமகிருஷ்ணன், இருளப்பன் ஒருங்கிணைத்தனர்.
