ADDED : ஆக 28, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: பேரையூர் நீதிமன்ற ஊழியர் ஹரீஷ் 35.
சில நாட்களுக்கு முன்பு இவரை உசிலம்பட்டி பால்பாண்டி, செல்லப்பாண்டி, செல்வம், சரத் ஆகியோர் தாக்கினர். ஹரீஷ் புகாரில் மூவரை உசிலம்பட்டி போலீசார் கைது செய்தனர். சரத்தை தேடி வருகின்றனர். அவரையும் கைது செய்ய வேண்டும் எனக்கோரி உசிலம்பட்டி நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கறிஞர்கள் வீரபிரபாகரன், ராமன், சொக்கநாதன், ஜெயச்சந்திரன் பாலச்சந்திரன், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
