ADDED : ஜூன் 14, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் கள்ளர் விடுதி எதிர்புறம் விவசாயி இஸ்ரவேல் 65, அங்கம்மாள் தம்பதியர் வீடு உள்ளது. வீட்டின் மேற்பகுதியில் குடிசை போட்டு பழைய மரச்சாமான்கள், வைக்கோல் போன்றவற்றை வைத்திருந்தனர். வீட்டின் பின்பகுதியில் தரிசு நிலத்தில் கிடந்த குப்பையில் யாரோ தீ வைத்துள்ளனர்.
இதனால் காற்றில் பரவிய தீ, மாடியில் இருந்த குடிசையிலும் பற்றி எரிந்தது. குடிசை எரிந்து பக்கத்தில் விழுந்ததில் மற்ற வீடுகளுக்கும் தீ பரவும் நிலை உருவானது. உசிலம்பட்டி போலீசார், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து பரவாமல் தடுத்தனர். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.