sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அச்சுறுத்தும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

/

அச்சுறுத்தும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

அச்சுறுத்தும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

அச்சுறுத்தும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்


ADDED : ஏப் 19, 2025 06:26 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி; வாடிப்பட்டியில் வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ.,) அலுவலகம் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

இங்குள்ள பெருமாள் கோயில் தெப்பத்தின் ஒரு பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன் ஆர்.ஐ., அலுவலகம் கட்டப்பட்டது. பராமரிப்பின்றி பழுதடைந்த கட்டடத்தின் ஒரு பகுதி பயன்படுத்த முடியாத நிலைக்கு போனது. சில ஆண்டுகளுக்கு முன் ஆர்.ஐ., அமர்ந்து பணியாற்றும் அறையின் கூரையில் இருந்த சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. துருப்பிடித்த கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.

உதிர்ந்து விழுந்த பகுதியில் கண்துடைப்பாக ஏதோ சிமென்டால் பூசப்பட்டுள்ளது. மற்ற பகுதிகள் விழும் நிலையில்தான் உள்ளது. எனவே இங்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடனே உள்ளனர். மழைக்காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. பேரிடர் காலங்களில் இடியும் கட்டடங்களை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்கும் ஆர்.ஐ., அலுவலகமே அபாய நிலையில் உள்ளது. புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us