sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அறுவை சிகிச்சை வளாகம் பிப்ரவரியில் திறப்பு

/

அறுவை சிகிச்சை வளாகம் பிப்ரவரியில் திறப்பு

அறுவை சிகிச்சை வளாகம் பிப்ரவரியில் திறப்பு

அறுவை சிகிச்சை வளாகம் பிப்ரவரியில் திறப்பு


ADDED : ஜன 18, 2024 06:34 AM

Google News

ADDED : ஜன 18, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜப்பான் நிறுவனத்தின் நிதியில் கட்டப்பட்டு வரும் அறுவை சிகிச்சை வளாகம் பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வளாகம் ரூ.150 கோடி மதிப்பில் 2021, ஏப்.,26ல் தொடங்கப்பட்டது. 18 மாதங்களில் பணிகள் முடியும் என கூறப்பட்டாலும் கருணாநிதி நுாலக கட்டுமானமும் துவங்கியதால் அறுவை சிகிச்சை வளாக கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டது. 2023, டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டது. தற்போது 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது. பிப்ரவரியில் கட்டடம் திறக்கப்பட உள்ள நிலையில் இறுதிகட்ட பணிகளை மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி ஆய்வு செய்தார்.

அவர் கூறுகையில், ''மக்கள் உயர்தர மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் மதுரை அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உடலுறுப்பு தானம் பற்றிய கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் உறுப்புகளுக்காக காத்திருக்கும் நோயாளிகள் வாழ்வு பெறுவர்'' என்றார். டீன் ரத்தினவேல், ஆர்.எம்.ஓ., சரவணன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us