ADDED : மே 15, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் ; சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மே 13ல் தசாவதாரம் நிகழ்ச்சி யாதவ சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.
இங்கு மே 12ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இதன்பின் முக்கிய நிகழ்வாக தசாவதாரம் நிகழ்ச்சி அக்ரஹாரம் ஸந்தான கோபால கிருஷ்ணசாமி கோயிலில் நடந்தது. இரவு 10:00 முதல் காலை 6:00 மணி வரை சுவாமிக்கு 10 அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, பூபதி செய்திருந்தனர்.