sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சோழவந்தானுக்கு வந்த சோதனை

/

சோழவந்தானுக்கு வந்த சோதனை

சோழவந்தானுக்கு வந்த சோதனை

சோழவந்தானுக்கு வந்த சோதனை


ADDED : மே 04, 2025 05:00 AM

Google News

ADDED : மே 04, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : சோழவந்தானில் ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடு செய்யப்படாததால் அதை அகற்றும் பணி தாமதமாகிறது.

ஜெனகை மாரியம்மன் கோயில் பகுதி, ஸ்டேட் வங்கி, வட்டபிள்ளையார் கோயில், மார்க்கெட் ரோடு பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளாலும், சில கடை உரிமையாளர்கள் சில அடி வரை ரோட்டை ஆக்கிரமித்துள்ளதாலும் தினமும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதுதொடர்பான வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இதன்காரணமாக வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை இணைந்து பெயரளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். 'முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்' என அறிவித்திருந்தனர்.

மே 2,3ல் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள பேரூராட்சி அவகாசம் கொடுத்த நிலையில், நேற்று வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

பேரூராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ''வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடுகள் செய்யாமல் உள்ளனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தாமதமாகிறது'' என்றனர்.






      Dinamalar
      Follow us