sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திறந்திருக்கிறது உலகச்சந்தை; ஏற்றுமதி செய்ய வாய்ப்பு

/

திறந்திருக்கிறது உலகச்சந்தை; ஏற்றுமதி செய்ய வாய்ப்பு

திறந்திருக்கிறது உலகச்சந்தை; ஏற்றுமதி செய்ய வாய்ப்பு

திறந்திருக்கிறது உலகச்சந்தை; ஏற்றுமதி செய்ய வாய்ப்பு


ADDED : அக் 09, 2025 02:57 AM

Google News

ADDED : அக் 09, 2025 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மத்திய அரசின் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையமான இ.பி.சி., மற்றும் 'செடா' எனும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இணைந்து, இங்கிலாந்து நாட்டின் ஏற்றுமதி வாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் நேற்று நடந்தது. மதுரை இ.பி.சி., நிர்வாகி ராஜ்குமார் வரவேற்றார். தலைவர் ராஜமூர்த்தி தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினரான வேளாண் விளைபொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி ஆணையமான 'அபேடா'வின் பிராந்திய தலைவர் ஷோபனா குமார் நிகழ்ச்சியில் பேசியதாவது:

இப்போது அமெரிக்காவில் விதிக்கப்பட்ட புதிய வரிகளால் நமது ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்கவே இங்கிலாந்து, இந்தியா இடையே வரியில்லா வர்த்தகம் கையெழுத்தாகியுள்ளது.

ஏற்றுமதி துறையில் இளம் தலைமுறை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. முக்கியமாக வேளாண் உற்பத்தி சார்ந்த பொருட்கள் ஏற்றுமதிக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறது.

கடந்த 25 ஆண்டுகளில் ஏற்றுமதி பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசின் பங்களிப்பும், ஏற்றுமதியாளர்களுக்கு அரசு அளிக்கும் ஆதரவும் மிக முக்கியமாக உள்ளது.

இந்தியாவில் இருந்து பழங்கள், காய்கறிகள், அரிசி, சிறுதானியங்கள் மற்றும் பதப்படுத்திய பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. ஆனால், தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் மிகவும் குறைவு.

இளம் தலைமுறையினர் வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டி புதிய பொருட்களாக உற்பத்தி செய்தால், அதிக வாய்ப்புகள் கிடைக்கும். உற்பத்தி செய்த பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை 'அபேடா' பெற்றுத் தருகிறது.

உலக பொருளாதாரத்தில் 5வது இடத்தில் உள்ள இந்தியா, 2047ல் முதல் இடத்திற்கு வர வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். அதற்கு வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து, அபேடா பிராந்திய தலைவர் ஷோபனாகுமார் மேலும் கூறியதாவது: * சிறுதானியங்களை பதப்படுத்தி தயாரிக்கப்பட்ட நுாடுல்ஸ், பாஸ்தாவை வெளிநாடுகளில் அதிகம் விரும்புகின்றனர். இந்தியாவின் புவிசார் குறையீடுகளை பெற்றுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்துார் பால்கோவா, திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா போன்றவைக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன * மாங்காய், பதப்படுத்திய முருங்கை இலை, முருங்கை பவுடர், கீரை சூப் வகைகள் அதிகளவில் வெளிநாடுகளில் விரும்பும் உணவாக உள்ளது. இவற்றை ஏற்றுமதி செய்யலாம் * காய்கறிகள், பழங்கள், பூக்கள், அதில் இருந்து தயாரிக்கும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், மூலிகை மருந்து பொருட்கள், ஊறுகாய், சட்னி பவுடர் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாரம்பரிய அரிசி வகைகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன * மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வேளாண் பொருட்களை ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சவுதி, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us