ADDED : டிச 15, 2024 07:07 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா உச்ச நிகழ்ச்சியாக தீர்த்த உற்ஸவம் நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு உற்ஸவர் சன்னதியில் சுவாமி, தெய்வானை, சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, விநாயகர், அஸ்தரதேவர் எழுந்தருளினர்.
டிச.5 முதல் நடந்த யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு வெள்ளி குடங்களிலிருந்த புனித நீர் மூலம் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மலர் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு அஸ்தரதேவர் பல்லக்கிலும், சுவாமி, தெய்வானை சிம்மாசனத்திலும் சரவணப்பொய்கையில் எழுந்தருளினர்.
ஆறுமுக சுவாமி சன்னதியில் யாக பூஜை முடிந்து சரவணப் பொய்கைக்கு அஸ்தரதேவரை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது.
இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி, தெய்வானை ரத வீதிகளில் புறப்பாடாகி அருள்பாலித்தனர்.