sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பணம் திருட்டு... போன வாரம் நகை பறிப்பு... இந்த வாரம் பயத்தில் பந்தடி

/

பணம் திருட்டு... போன வாரம் நகை பறிப்பு... இந்த வாரம் பயத்தில் பந்தடி

பணம் திருட்டு... போன வாரம் நகை பறிப்பு... இந்த வாரம் பயத்தில் பந்தடி

பணம் திருட்டு... போன வாரம் நகை பறிப்பு... இந்த வாரம் பயத்தில் பந்தடி


ADDED : அக் 22, 2024 05:18 AM

Google News

ADDED : அக் 22, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகே பந்தடி பகுதியில் தொடர் திருட்டு, நகைபறிப்பு நடந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மதுரை பந்தடி 9வது தெருவைச் சேர்ந்தவர் மஞ்சுளா 50. கேட்டரிங் அலுவலக ஊழியர். நேற்றுமுன்தினம் இரவு 9:30 மணிக்கு வீட்டருகே நடந்து வந்தபோது டூவீலரில் ெஹல்மெட் அணிந்து வந்த 2 பேர், மஞ்சுளாவின் 3 பவுன் நகையை பறித்தனர். அவர்களுடன் மஞ்சுளா போராடியதில் ஒன்றரை பவுன் நகையை மட்டுமே அவரால்காப்பாற்ற முடிந்தது.

அதேபோல் கடந்த வாரம் பந்தடி 7வது தெருவில் நடந்து வந்த இரு சிறுவர்கள் திடீரென ஒரு வீட்டிற்குள் புகுந்தனர். அங்கு ஒரு அறையில் கணவன், மனைவி 'டிவி' பார்த்துக்கொண்டுஇருந்தனர்.

இதை பயன்படுத்தி டேபிளில் இருந்த பையில் இருந்து ரூ.3 ஆயிரத்தை திருடிச்சென்றனர். பந்தடி பகுதியை குறிவைத்து திருட்டு, நகைபறிப்பு நடந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:

தீபாவளி பஜார் பாதுகாப்பில் போலீசார் கவனம் செலுத்துவதை திருடர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டு குற்றங்களில் ஈடுபடுகின்றனர். ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us