sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தமிழகத்தில் ஓட்டுத்திருட்டை தடுக்க கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்; சொல்கிறார் திருமாவளவன்

/

தமிழகத்தில் ஓட்டுத்திருட்டை தடுக்க கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்; சொல்கிறார் திருமாவளவன்

தமிழகத்தில் ஓட்டுத்திருட்டை தடுக்க கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்; சொல்கிறார் திருமாவளவன்

தமிழகத்தில் ஓட்டுத்திருட்டை தடுக்க கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்; சொல்கிறார் திருமாவளவன்


ADDED : அக் 27, 2025 03:59 AM

Google News

ADDED : அக் 27, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம்: ''தமிழகத்தில் ஓட்டுத் திருட்டை தடுக்க தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்,'' என, மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் யோசனை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும். தமிழகம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய 3 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இதனை நடைமுறைப்படுத்தக்கூடாது.

பீகாரில் ஓட்டுத்திருட்டு நடந்ததை போல் தமிழகத்திலும் நடக்கும். இதைத் தடுக்க தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.

பல்கலை மசோதா சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வி.சி.க., சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன் மறுசீராய்வு செய்வதாக அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பா.ஜ., பொறுப்பில் இருந்து அண்ணாமலை வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் அரசியல் செய்வதற்கு களம் இல்லாமல் விரக்தி அடைந்துள்ளார். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல வி.சி.க., வுக்கு எதிராக அவர் அவதுாறு பேசி வருகிறார். அண்ணாமலை எப்படி பிரசாரம் செய்தாலும் பா.ஜ., தலைமைக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை.

ஆணவ படுகொலைக்கு புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தி வி.சி.க., சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. புதிய சட்டம் இயற்றுவது குறித்த முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. வரும் சட்டசபைக் கூட்டத் தொடரில் ஆணவ படுகொலைக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

2026 தேர்தலில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதியில் ஏதாவது ஒன்றில் வி.சி.க., போட்டியிடுமா என பலரும் கேட்கின்றனர். தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீடு பெறுவதைப்பொறுத்து முடிவு செய்யப்படும் என்றார்.

கூட்டணி அமைக்க பா.ஜ., போராடுகிறது

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திருமாவளவன் கூறியதாவது: பா.ஜ., கூட்டணி அமைக்கவில்லை, அமைக்கத்தான் போராடி வருகிறது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் நீடிக்குமா என்பது கேள்விக்குறி. முதலில் கூட்டணி அமையட்டும். தி.மு.க., கூட்டணியை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஓர் அணியாகவே திரளவில்லை. தி.மு.க.,விற்கு த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளால் எந்த பாதிப்பும் இருக்காது என்றார்.








      Dinamalar
      Follow us