sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆறுமுக நயினார் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானம் திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழு முடிவு

/

ஆறுமுக நயினார் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானம் திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழு முடிவு

ஆறுமுக நயினார் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானம் திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழு முடிவு

ஆறுமுக நயினார் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானம் திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழு முடிவு


ADDED : ஏப் 21, 2025 06:24 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயில்களான சரவணப் பொய்கை ஆறுமுக நயினார் கோயில், மலைக்கு பின்புறமுள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோயில், சப்த கன்னிமார் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக உபகோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழு முடிவு செய்தது.

முதற் கட்டமாக சொக்கநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயில், பாம்பலம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில்களில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்ம தேவன், ராமையா ஆகியோர் செலவில் ஏப். 7ல் கும்பிஷேகம் நடத்தினர்.

இரண்டாம் கட்டமாக ஆறுமுக நயினார் கோயில், பால் சுனை கண்ட சிவபெருமான் கோயில், சப்த கன்னிமார் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தவும், அதற்காக மே மாதம் பாலாலயம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்ததும் பணிகள் துவங்கும்.

தொடர்ந்து மலை மேல் உள்ள காசி விசுவநாதர் கோயில், புதிய படிக்கட்டு பகுதியில் படிக்கட்டு விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக, மூலஸ்தானங்களில் விரைவில் திருப்பணிகள் துவங்க உள்ளது என அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us