/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கள்ளழகர் கோயிலில் திருப்பவித்ர உற்ஸவம்
/
கள்ளழகர் கோயிலில் திருப்பவித்ர உற்ஸவம்
ADDED : ஆக 30, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆவணி மாதத்தை முன்னிட்டு திருப்பவித்ர உற்ஸவம் செப்.3 முதல் 7 வரை நடக்கிறது.
செப்.3 காலை 10:00 மணிக்கு சுந்தரபாண்டியன் குறடு மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாளுக்கு புதிய வஸ்திரங்கள் அணிவித்து 108 கலச திருமஞ்சனம் நடைபெறும்.
செப். 7 ல் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு அனைத்து பூஜைகளும் முடிந்து நடை சாத்தப்படும்.
மறுநாள் (செப். 8) காலை 6:00 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். ஏற்பாடுகளை துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.