/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
2011க்கு பிறகு போலீசாக சேர்ந்தவர்களுக்கு 23 ஆண்டுகளில் சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு; 2002 -2010க்குள் சேர்ந்தவர்களுக்கு தகுதி இருந்தும் நிராகரிப்பு
/
2011க்கு பிறகு போலீசாக சேர்ந்தவர்களுக்கு 23 ஆண்டுகளில் சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு; 2002 -2010க்குள் சேர்ந்தவர்களுக்கு தகுதி இருந்தும் நிராகரிப்பு
2011க்கு பிறகு போலீசாக சேர்ந்தவர்களுக்கு 23 ஆண்டுகளில் சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு; 2002 -2010க்குள் சேர்ந்தவர்களுக்கு தகுதி இருந்தும் நிராகரிப்பு
2011க்கு பிறகு போலீசாக சேர்ந்தவர்களுக்கு 23 ஆண்டுகளில் சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு; 2002 -2010க்குள் சேர்ந்தவர்களுக்கு தகுதி இருந்தும் நிராகரிப்பு
ADDED : ஜூன் 15, 2025 07:13 AM

மதுரை: தமிழக காவல் துறையில் போலீசிற்கான பதவி உயர்வுக்கான காலவரம்பு குறைத்து அரசு உத்தரவிட்டதன்மூலம் 2011க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் 23 ஆண்டுகளில் சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு பெறுவர். அதேசமயம் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சேர்ந்தவர்கள் பழைய உத்தரவுப்படி பதவி உயர்வு பெற 25 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்பதால் தகுதி இருந்தும் தாங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.
தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் போலீசிற்கான பதவி உயர்வு காலவரம்பு குறைக்கப்படும் என்பதும் ஒன்று. இதுதொடர்பாக ஐந்தாவது போலீஸ் கமிஷன் பரிந்துரையிலும் பதவி உயர்வு குறித்து குறிப்பிட்டிருந்தது. இதன்படி கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின், 'போலீசிற்கான நிலை உயர்த்துதல் (அப்கிரேடிஷன்) தற்போது 10+5+10 ஆண்டுகள் என்பதை மாற்றி 10+3+10 என நிர்ணயம் செய்யப்படும். பத்தாண்டுகள் பணிபுரிந்த இரண்டாம் நிலை காவலர்கள் முதல்நிலை காவலராகவும், மேலும் 3 ஆண்டுகள் பணிபுரிந்தபிறகு ஏட்டாகவும், அடுத்த 10 ஆண்டுகள் ஏட்டாக பணிபுரிந்த பிறகு சிறப்பு எஸ்.ஐ.,யாகவும் தரம் உயர்த்தப்படுவர்' என அறிவித்தார்.
இதுதொடர்பாக அரசாணை ஜூன் 13 ல் வெளியிடப்பட்டுள்ளது. 2011க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இச்சலுகை அளிக்கப்பட உள்ளது. அதேசமயம் 2002 முதல் 2010 வரை பணியில் சேர்ந்த தங்களுக்கு 23 ஆண்டுகள் தகுதி இருந்தும் சிறப்பு எஸ்.ஐ.,க்கான பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஏட்டுகள் புலம்புகின்றனர்.
முதல்வர் பரிசீலிப்பாரா
அவர்கள் கூறியதாவது: பழைய முறைபடி 10 ஆண்டுகள் இரண்டாம் நிலை காவலராகவும், அடுத்த 5 ஆண்டுகளில் முதல் நிலை காவலராகவும், 15 ஆண்டுகளுக்கு பின் ஏட்டாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் சிறப்பு எஸ்.ஐ.,யாகவும் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. மொத்தத்தில் 25 ஆண்டுகளானால்தான் பதவி உயர்வு கிடைக்கும். புதிய உத்தரவுபடி 23 ஆண்டுகளானாலே போதும்.
2002ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்க பழைய உத்தரவுப்படி இன்னும் 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கின்றனர். முதல்நிலை காவலராக நாங்கள் பணிபுரிந்த 5 ஆண்டுகளை 3 ஆண்டுகளாக குறைத்து அரசு சிறப்பு சலுகை அளித்தால் இந்தாண்டே எங்களுக்கு பதவி உயர்வு கிடைத்துவிடும். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பரிசீலிக்கவேண்டும். டி.ஜி.பி.,க்கும் மனு அனுப்பி வருகிறோம். இவ்வாறு கூறினர்.