sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேர்தல் பணியாற்றியவர்களுக்கு மதிப்பூதியம் வரும்... ஆனா வராது... 60 சதவீதம் பேருக்கு இன்னும் கிடைக்கல

/

தேர்தல் பணியாற்றியவர்களுக்கு மதிப்பூதியம் வரும்... ஆனா வராது... 60 சதவீதம் பேருக்கு இன்னும் கிடைக்கல

தேர்தல் பணியாற்றியவர்களுக்கு மதிப்பூதியம் வரும்... ஆனா வராது... 60 சதவீதம் பேருக்கு இன்னும் கிடைக்கல

தேர்தல் பணியாற்றியவர்களுக்கு மதிப்பூதியம் வரும்... ஆனா வராது... 60 சதவீதம் பேருக்கு இன்னும் கிடைக்கல


ADDED : ஏப் 23, 2024 06:50 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்.,19ல் நடந்த தேர்தல் ஓட்டுப்பதிவுக்காக மாவட்டத்தில் 2751 பூத்கள் அமைக்கப்பட்டன. அதில் 13,400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

பல பூத்களில் அடிப்படை வசதிகள் இல்லை, உணவு கிடைக்க ஏற்பாடு செய்யவில்லை, ஓட்டுப்பதிவு முடிந்து நள்ளிரவுக்கு மேல் வீடு திரும்பிய குறிப்பாக ஆசிரியைகளுக்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தவில்லை என சர்ச்சைகள் எழுந்தன. இதுகுறித்து ஆசிரியர் சங்கங்கள் ஆதாரங்களுடன் தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பியுள்ளன.

இந்நிலையில், ஓட்டுப்பதிவு முடிந்த பின் பணியில் ஈடுபட்டவர்களுக்கு அன்றிரவே மதிப்பூதியமாக பி.ஓ.,க்களுக்கு ரூ.1700, மற்ற நிலையில் (பி1, பி2, பி3) பணியாற்றியவர்களுக்கு ரூ.1300, ஆபிஸ் அசிஸ்டென்ட் (கிளாஸ் 4) ரூ.700, கவுன்டிங் சூப்பர்வைசருக்கு ரூ.850, மைக்ரோ அப்சர்வர் ரூ.1000 என அவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும். ஆனால் இந்தாண்டு பணம் பட்டுவாடாவில் மாற்றம் செய்யப்பட்டது.

இதன்படி வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கூறி, அவர்களின் வங்கி கணக்கு விபரம் சேகரிக்கப்பட்டது. நேற்று வரை சிலருக்கு பணம் வரவு வைக்கப்பட்ட நிலையில், இன்னும் 60 சதவீதம் பேருக்கு கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

ஆசிரியர்கள் கூறுகையில் ''தேர்தல் பணி முடிந்தவுடன் மதிப்பூதியம் குறித்து கேட்டோம். 'நீங்கள் வீட்டுக்கு செல்வதற்குள் உங்களுக்கு ஆன்லைனில் பட்டுவாடா செய்யப்படும்' என்றனர். ஆனால் மூன்று நாட்களாகியும் இதுவரை 60 சதவீதம் பேருக்கு மேல் கிடைக்கவில்லை. குறிப்பாக உதவி பேராசிரியர்கள் பலருக்கு இன்னும் மதிப்பூதியம் வரவில்லை'' என்றனர்.






      Dinamalar
      Follow us