/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீதிபதி சுவாமிநாதனுக்கு மிரட்டல்; மதுரை எஸ்.பி.,யிடம் புகார்
/
நீதிபதி சுவாமிநாதனுக்கு மிரட்டல்; மதுரை எஸ்.பி.,யிடம் புகார்
நீதிபதி சுவாமிநாதனுக்கு மிரட்டல்; மதுரை எஸ்.பி.,யிடம் புகார்
நீதிபதி சுவாமிநாதனுக்கு மிரட்டல்; மதுரை எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : டிச 12, 2025 07:29 AM

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் துாணில் தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு முகநுால் (பேஸ்புக்) பக்கத்தில் மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை எஸ்.பி., அரவிந்த்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
பாரதிய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி தலைவர் சத்திய சுபாஷ் அளித்த மனு: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்காக சமூக வலைதளங்களில் நீதிபதியை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு அருவருக்கத்தக்க வகையில் சித்தரித்தும், நீதித்துறையை களங்கப்படுத்தும் விதமாக ராம் சேகுவாரா என்ற முகநுால் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அவருடைய பக்கங்களை பார்த்தபோது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய நபராகவும், தீவிரவாதத்தை துாண்டும் நபராகவும் உள்ளார். அவரது பதிவுகள் பொது அமைதியை கெடுத்து, மதக்கலவரத்தை துாண்டிவிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. சம்பந்தப்பட்ட முகநுால் பக்கத்தை பயன்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

