ADDED : நவ 16, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டத்தில் வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்க நேற்றும், இன்றும் (நவ.16) எஸ்.ஐ.ஆர்.,உதவி மையங்கள் செயல்படுகின்றன.
இங்கு அந்தந்த ஓட்டுச் சாவடிகளிலேயே வாக்காளர்களின் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, நிலை அலுவலர்கள் மூலம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, உடன் கணினியில் பதிவேற்றம் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்தார்.

