ADDED : டிச 18, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சுப்ரமணியபுரம் பவர்ஹவுஸில் நாளை (டிச.19) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. சுப்ரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம் ரோடு, யானைக்கல், டவுன்ஹால் ரோடு, மீனாட்சி அம்மன் கோயில்,
மாகாளிபட்டி, மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம் பிள்ளையார்கோயில், தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குறைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் பாஸ்கரபாண்டி தெரிவித்துள்ளார்.