/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புதுார் மார்க்கெட்டில் வியாபாரமே இல்லையாம் வியாபாரிகள் புலம்பல்
/
புதுார் மார்க்கெட்டில் வியாபாரமே இல்லையாம் வியாபாரிகள் புலம்பல்
புதுார் மார்க்கெட்டில் வியாபாரமே இல்லையாம் வியாபாரிகள் புலம்பல்
புதுார் மார்க்கெட்டில் வியாபாரமே இல்லையாம் வியாபாரிகள் புலம்பல்
ADDED : மே 07, 2025 01:54 AM

மதுரை: மதுரை புதுார் மாநகராட்சி காய்கறி மார்க்கெட் 2006 ம் ஆண்டு 200 கடைகளுடன் கட்டப்பட்டது. வியாபாரம் குறைந்ததால் தற்போது 50 கடைகள் மட்டுமேசெயல்பாட்டில் உள்ளன.
கொரோனா வந்ததாலும், மாட்டுத்தாவணி மார்க்கெட் திறந்ததாலும், காய்கறி வண்டிகள் தெருக்களில் அதிகளவில் வருவதாலும்மக்கள் வருகை குறைந்து விட்டதாக இங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.
விடுமுறை நாட்களில் 70 கடைகள் வரை செயல்படுகின்றன. வியாபாரம் குறைந்ததால் தினமும் ரூ. 40 வாடகை கொடுக்க முடியாதநிலையில் வியாபாரிகள் உள்ளனர். வேறு தொழில் செய்ய வசதி இன்றி பலர் இங்கேயே இருப்பதாக புலம்புகின்றனர்.விலையும் நிர்ணயம் செய்யபடுவதில்லை. பார்க்கிங் இடமும் இல்லை.
ஓராண்டாக வியாபாரம் மிகவும் மோசமாக உள்ளது. கட்டடம் பழமையாகவும், உடைந்தும், தகர கூரைகள் சில இடங்களில் விரிசல்களுடனும், தரைகள் சீரற்றும்,கழிப்பறைகள் மோசமாகவும் உள்ளன. புதிதாக சீரமைத்து 50 கடைகளுக்கு மட்டும் இடத்தை விட்டு பார்க்கிங் இடமாகவோ அல்லது தொடக்கப் பள்ளியாகவோமாற்றியமைக்கலாம். தினமும் ரூ. 30 வாடகை வசூலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
2022ல் மத்திய அரசு உணவுப் பாதுகாப்பு துறைசார்பில் சுகாதாரமான, பாதுகாப்பானவிற்பனை செய்யும் இடம் என சான்று வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

