sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் அக்.29,30ல் வாகனங்களுக்கு தடை

/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் அக்.29,30ல் வாகனங்களுக்கு தடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் அக்.29,30ல் வாகனங்களுக்கு தடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் அக்.29,30ல் வாகனங்களுக்கு தடை


ADDED : அக் 24, 2024 05:24 AM

Google News

ADDED : அக் 24, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கீழமாரட் வீதி, நான்கு மாசி வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகளில் தற்போது இலகுரக (டாடா ஏஸ் போன்ற) சரக்கு வாகனங்கள் மதியம் 12:30 மணி முதல் 3:30 மணி வரை மற்றும் இரவு 10:00 மணி முதல் காலை 8:00 மணி வரை மட்டுமே சரக்குகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படுகிறது. அக்.28 ல் பகல் நேரத்தில் மகால் ரோடு, கீழமாரட் வீதி, மாசி வீதிகள் மற்றும் ஆவணி மூல வீதிகளில் இலகுரக சரக்கு வாகனங்கள் உட்பட எந்த ஒரு சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.

மேலும் பைபாஸ் ரோடு, காமராஜர் ரோடு, அண்ணாநகர் 80 அடிரோடு, கே.கே. நகர் 80 அடிரோடு, அழகர்கோவில் ரோட்டில் மூன்றுமாவடி சந்திப்பு, புதுநத்தம் ரோடு - அய்யர்பங்களா சந்திப்பு, திண்டுக்கல் ரோடு - கூடல்நகர் சந்திப்பு, அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பு, சிவகங்கை சாலை ரிங்ரோடு சந்திப்பு, மீனாட்சி மருத்துவமனை சந்திப்புகளிலிருந்து நகருக்குள் நுழைய லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் (பயணிகள் வாகனங்கள் தவிர்த்து) வந்து செல்ல அனுமதி இல்லை. அன்று இரவு 11:00 மணிமுதல் மறுநாள் (அக்.29) காலை 6:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

அக்.29,30ல் பகல் மற்றும் இரவு நேரம் முழுவதும் மதுரை நகருக்குள் மேற்படி ரோடுகளில் இருந்து லாரிகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை. இந்நாட்களில் மக்களின் நலன் கருதி நேதாஜி ரோடு, மேலமாசிவீதி, தெற்குமாசிவீதி, கீழமாசிவீதி, மேல ஆவணி மூல வீதி, கீழஆவணி மூல வீதி, தெற்காவணி மூல வீதிகளில் டூவீலர்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அவசியமெனில் டூவீலர் போக்குவரத்தும் தடை செய்யப்படும். மேலும் இந்நாட்களில் மகால் ரோடு, கீழமாரட் வீதிகள் வழியாக வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். எந்த வகையான வாகனங்களும் நிறுத்தம் செய்ய அனுமதி இல்லை என போலீசார் அறிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us