sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

எழும்பூரில் சீரமைப்பு பணி தாம்பரத்துடன் ரயில் நிற்கும்

/

எழும்பூரில் சீரமைப்பு பணி தாம்பரத்துடன் ரயில் நிற்கும்

எழும்பூரில் சீரமைப்பு பணி தாம்பரத்துடன் ரயில் நிற்கும்

எழும்பூரில் சீரமைப்பு பணி தாம்பரத்துடன் ரயில் நிற்கும்


ADDED : நவ 09, 2025 05:50 AM

Google News

ADDED : நவ 09, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சீரமைப்பு பணிகளால் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பகுதி ரத்து: நவ., 10 (நாளை) முதல் 29 வரை, கொல்லம் - எழும்பூர் 'அனந்தபுரி' (20636), ராமேஸ்வரம் - எழும்பூர் 'சேது' (22662), ராமேஸ்வரம் - எழும்பூர் (16752), தஞ்சை - எழும்பூர் 'உழவன்' (16866) ஆகிய ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். தாம்பரம் - எழும்பூர் இடையே இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

புறப்படும் இடம் மாற்றம்: நவ., 11 முதல் 30 வரை, ராமேஸ்வரம் 'சேது' ரயில் (22661) மாலை 6:20 மணிக்கு, ராமேஸ்வரம் ரயில் (16751) இரவு 7:42 மணிக்கு, கொல்லம் 'அனந்தபுரி' ரயில் (20635) இரவு 8:20 மணிக்கு, தஞ்சை 'உழவன்' ரயில் (16865) இரவு 11:00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.அடுத்த அறிவிப்பு வரும் வரை குருவாயூர் - எழும்பூர் - குருவாயூர் தினசரி ரயில்கள் (16127/16128), தாம்பரத்துடன் நிறுத்தப்பட்டு மறுமார்க்கத்தில் அங்கிருந்து காலை 10:47 மணிக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us