ADDED : செப் 13, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு ஒத்தக்கடை மெயின்ரோட்டில் மரக் கன்றுகள் நடும் விழா தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது.
ஜெயபாலன் முன்னிலை வகித்தார். இயற்கை ஆர்வலர் ராமமூர்த்தி வரவேற்றார். பாரதி வாழ்க்கை வரலாறு, கவிதைகள் குறித்து தென்னவன் பேசினார். குழந்தைகள் விஜய பிரபாகரன், யானு ஸ்ரீ, ரூபன், செழியன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். அஞ்சலக பணியாளர் பிரேம், ஆசிரியர் கார்த்திக் பங்கேற்றனர். இயற்கை ஆர்வலர் சுசீலா நன்றி கூறினார்.
