நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: க.கல்லம்பட்டி துவராபதி அம்மன் கோயில் ஜல்லிக்கட்டு காளை நேற்று உடல் நலக்குறைவால் இறந்தது. 15 ஆண்டுகளாக கோயிலில் வளர்ந்த இக்காளை அலங்காநல்லுார், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசுகளை வென்று கிராமத்திற்கு பெருமை சேர்த்தது
. இறந்த காளையை நேற்று கிராம மக்கள் அலங்கரித்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அருகில் அடக்கம் செய்தனர்.