ADDED : மே 18, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள ரயில்வே கேட் நேற்று காலை 6:30 மணிக்கு மும் பை - நெல்லை தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக மூடப்பட்டது.
ரயில் சென்ற பின் கேட் பழுதால் திறக்க முடியவில்லை. இருசக்கர வாகனங்கள் முதல் பஸ்கள் வரை நீண்ட வரிசையில் ஒருமணி நேரம் காத்திருந்தன. பின்பு ரயில்வே கேட் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சீரானது.