ADDED : பிப் 14, 2024 05:56 AM

'இருவேறு சமூகத்தை சேர்ந்த நாங்கள் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தோம்; சந்தோஷமாக வாழ்கிறோம். உண்மைக்காதலுக்கு ஏதும் தடையாகாது' என்கின்றனர் தேனியை சேர்ந்த வழக்கறிஞர்கள் திவாகர், அனு.
அனு கூறியதாவது: நானும், கணவர் திவாகரும் கல்லுாரி இறுதி கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றோம். அப்போது முதல் முறையாக சந்தித்தோம். இருவரும் ஒரே மாவட்டம் என்பதால் இயல்பாக பழகினோம். படிப்பு முடிந்து தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நான் வழக்கறிஞர் பணியை தொடர்ந்தேன். அப்போது திவாகர் காதலை கூறிய போது 'பிடித்திருந்தால் என் காதலை ஏற்றுக்கொள்' என்றார். அதற்கு நான் பதில் கூறவில்லை. அதற்கு பின்பும் நண்பர்களாக இருந்தோம். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் திவாகர் சட்ட அலுவலகத்தில் பயிற்சியில் சேர்ந்தேன். அவர் தொழில் ரீதியாக உதவி செய்தார். இது என்னை ஈர்த்ததால் அவரை காதலித்தேன். அதன் பின் பெற்றோரிடம் அனுமதி கோரினேன். சம்மதிக்காததால் எதிர்ப்பை மீறி பதிவு திருமணம் செய்தோம். திவாகர் மீது நான் கொண்ட துாய அன்பின் அடையாளமாக எங்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.

