ADDED : ஆக 25, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
மேலுார், ஆக.26– மேலுார் அருகே எட்டி மங்கலத்தில் நேற்று முன் தினம் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
இந்நிகழ்ச்சியின் போது, இரு தரப்பினரிடைய தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மேலவளவில் இருந்த செல்வத்தை 32, டூ வீலரில் வந்தவர்கள் வெட்டிவிட்டு தப்பினர். இவ்வழக்கில் மேலவளவு போலீசார் அழகிரி பட்டி பிரகாஷ் 20, மேலவளவு நித்திஷ் குமார் 20, உள்ளிட்ட இருவரை கைது செய்து டூ வீலர், அரிவாள் மற்றும் வாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
