sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு வேலை மோசடியில் ஈடுபட்ட கண்டக்டர் உட்பட 2 பேர் கைது

/

அரசு வேலை மோசடியில் ஈடுபட்ட கண்டக்டர் உட்பட 2 பேர் கைது

அரசு வேலை மோசடியில் ஈடுபட்ட கண்டக்டர் உட்பட 2 பேர் கைது

அரசு வேலை மோசடியில் ஈடுபட்ட கண்டக்டர் உட்பட 2 பேர் கைது


ADDED : ஜூன் 26, 2025 02:03 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் பெற்று போலி நியமன ஆணை வழங்கிய வழக்கில் அரசு பஸ் கண்டக்டர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் மேலுார் அழகாபுரியைச் சேர்ந்தவர் அடைக்கலராஜ் 39. தனக்கும், மனைவி, உறவினருக்கும் அரசு வேலை பெற முயற்சித்து வந்தார். அப்போது வாடிப்பட்டி நீரேத்தான் பகுதியைச் சேர்ந்த குமரகுரு 30, அறிமுகமானார்.

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.20.33 லட்சம் பெற்ற குமரகுரு, போலி நியமன ஆணை, அடையாள அட்டை கொடுத்து ஏமாற்றினார். இதற்கு மதுரை மாவட்டம் பொம்மனம்பட்டி முன்னமலை 48, உடந்தையாக இருந்தது தெரிந்தது. இவர் அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். இருவரும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் கூறியதாவது: அடைக்கலராஜ் அரசு வேலைக்கு முயற்சித்து வருவதை அறிந்த அவரது உறவினர் முன்னமலை, தனது மனைவியின் அடையாள அட்டையை காண்பித்து, 'குமரகுரு என்பவர் மூலம் என் மனைவிக்கு அரசு வேலை வாங்கினேன்' என்றுக்கூறினார். இதை நம்பிய அடைக்கலராஜ் தனக்கும், மனைவிக்கும், சித்தி மகளுக்கும் அரசு வேலை பெற்றுத்தர குமரகுருவை அணுகினார்.அடைக்கலராஜ், சித்தி மகளுக்கு ஊரக வளர்ச்சித்துறையிலும், மனைவிக்கு நகராட்சி துறையிலும் நியமனம் செய்ததற்கான ஆணையும், அடையாள அட்டையும் குமரகுரு தந்தார்.

அவர்கள் பணியில் சேர சென்றபோது போலி ஆணை எனத்தெரிந்தது. இந்த மோசடி குறித்து கமிஷனர் லோகநாதனிடம் அடைக்கலராஜ் புகார் அளித்தார். அதன்அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us