/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தல் தி.மு.க., நிர்வாகி மகன் உட்பட 2 பேர் கைது
/
காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தல் தி.மு.க., நிர்வாகி மகன் உட்பட 2 பேர் கைது
காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தல் தி.மு.க., நிர்வாகி மகன் உட்பட 2 பேர் கைது
காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தல் தி.மு.க., நிர்வாகி மகன் உட்பட 2 பேர் கைது
ADDED : செப் 25, 2025 03:19 AM
மதுரை : மதுரையில் காதல் விவகாரத்தில் தீயணைப்பு வீரரின் மகனை காரில் கடத்திச்சென்று தாக்கியதாக, தி.மு.க., நிர்வாகி மகன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கல்லுாரி மாணவி உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மதுரை பைபாஸ் ரோட்டைச் சேர்ந்தவர் சிந்துஜா 19. தனியார் கல்லுாரியில் 2ம் ஆண்டு படிக்கிறார். இன்ஸ்டாகிராம் மூலம் நாகர்கோவில் தீயணைப்பு வீரரின் மகன் கோகுல் அறிமுகமானார். இவர் பி.இ., பட்டதாரி. சில ஆண்டுகளாக காதலித்தனர்.
இருவரும் சந்தித்து பேசிவந்த நிலையில், கோகுல் நட்பை சிந்துஜா துண்டித்தார். ஆத்திரமுற்ற கோகுல், இருவரும் பழகிய போட்டோக்கள் உள்ளன. திருமணம் செய்ய மறுத்தால் அதை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன் என சிந்துஜாவை மிரட்டினார்.
பயந்துபோன மாணவி, கல்லுாரி சீனியர் மாணவரான புதுார் பகுதியைச் சேர்ந்த மாதேஷிடம் 21, தெரிவித்தார். இவரது தந்தை தி.மு.க., வர்த்தக அணி நிர்வாகியாக உள்ளார்.
மாதேஷ் அறிவுரைபடி நேற்றுமுன்தினம் கோகுலை மதுரைக்கு வருமாறு சிந்துஜா கூறினார்.
காந்திமியூசியம் அருகே கோகுல் வந்தபோது, இரு கார்களில் காத்திருந்த மாதேஷ் உள்ளிட்டோர் கோகுலை கடத்தினர். செல்லும் வழியில் அவரது போனில் இருந்த சிந்துஜா தொடர்புடைய போட்டோக்களை அழித்தனர். கோகுலை கடுமையாக தாக்கி செல்லுார் பகுதியில் இறக்கிவிட்டு தப்பினர்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், டி.ஆர்.ஓ., காலனி கார்த்திக் என்பவருடையது எனத்தெரிந்தது. நட்புக்காக கொடுத்துள்ளார்.
அவரையும், மாதேஷையும் கைது செய்தனர். சிந்துஜா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.