sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த  இருவருக்கு 2 ஆண்டு சிறை

/

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த  இருவருக்கு 2 ஆண்டு சிறை

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த  இருவருக்கு 2 ஆண்டு சிறை

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த  இருவருக்கு 2 ஆண்டு சிறை


ADDED : ஜூலை 31, 2025 03:36 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : அரசு பஸ் கண்ணாடியை உடைத்த இருவருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2012ல் கன்னியாகுமரி குலசேகரத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் சென்றது.

இரவு 11:30 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி வந்தபோது டூவீலரில் வந்த 3 பேர் பஸ் கண்ணாடியை உடைத்தனர். அதில் டிரைவர் தமிழழகன் காயமடைந்தார்.

இச்சம்பவம் குறித்து புதுார் போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் 35, ரூபன் 42, மதன்குமார் 32 ஆகியோரை கைது செய்தனர்.

மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தநிலையில் மதன்குமார் இறந்தார். மற்ற இருவர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் மாவட்ட தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி

ஆஜரானார்.

இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எஸ்.சிவகடாட்சம் உத்தரவிட்டார். தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் வெவ்வேறு வழக்குகளில் ஏற்கனவே சிறையில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us