sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 'திருமங்கலத்தில் சபரீசன் போட்டியிட தயாரா'; சவால் விடுகிறார் உதயகுமார்

/

 'திருமங்கலத்தில் சபரீசன் போட்டியிட தயாரா'; சவால் விடுகிறார் உதயகுமார்

 'திருமங்கலத்தில் சபரீசன் போட்டியிட தயாரா'; சவால் விடுகிறார் உதயகுமார்

 'திருமங்கலத்தில் சபரீசன் போட்டியிட தயாரா'; சவால் விடுகிறார் உதயகுமார்

1


ADDED : பிப் 14, 2026 07:10 AM

Google News

ADDED : பிப் 14, 2026 07:10 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''எனது திருமங்கலம் தொகுதியில் சபரீசன் போட்டியிட தயாரா. அவரது நாடகம் தென்தமிழகத்தில் எடுபடாது'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதய குமார் சவால் விடுத்தார்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் தி.மு.க., அரசை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் உதயகுமார் பேசியதாவது: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வந்து 20 ஆண்டுகளாகி விட்டது. தற்போது காலத்துக்கு ஏற்ப மாற்றுவது மரபு. இத்திட்டம் மூலம் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும். இத்திட்டத்தில் தி.மு.க., முறைகேடு செய்ய முடியாது. அதனால்தான் எதிர்க்கிறது.

தென் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள தி.மு.க., வின் 'சர்வேயர் புலி' முதல்வரின் மருமகன் சபரீசன் மதுரையில் 10 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என கூறியுள்ளார். எனது திருமங்கலம் தொகுதியை தனியாக கவனிக்க கூறியுள்ளார்.

தைரியம் இருந்தால் அவர் திருமங்கலம் தொகுதியில் நிற்க முடியுமா. அவர் கருணாநிதி குடும்பத்தில் எப்படி நுழைந்தார். அவரது பொது வாழ்க்கை என்ன என மக்களுக்கு தெரியும்.

சபரீசனுக்கும் மக்கள் சேவைக்கும் என்ன சம்பந்தம். கனிமொழி வீட்டுக்குள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தி 'நானும் ரவுடி' என்பது போல், நானும் உழைக்கிறேன் என்ற அவரது நாடகம் தென் தமிழகத்தில் எடுபடாது.

இவ்வாறு பேசினார்






      Dinamalar
      Follow us