/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாதாள சாக்கடை குழாய் உடைப்பு 6 வார்டுகளில் பாதிப்பு
/
பாதாள சாக்கடை குழாய் உடைப்பு 6 வார்டுகளில் பாதிப்பு
பாதாள சாக்கடை குழாய் உடைப்பு 6 வார்டுகளில் பாதிப்பு
பாதாள சாக்கடை குழாய் உடைப்பு 6 வார்டுகளில் பாதிப்பு
ADDED : அக் 19, 2024 05:13 AM
மதுரை : மதுரையில் பாதாளச் சாக்கடை குழாய் உடைப்பு காரணமாக செல்லுார் உள்ளிட்ட 6 வார்டுகளில் குடியிருப்பு, ரோடுகளில் கழிவுநீர் சூழ்ந்து 2வது நாளாக மக்கள் சிரமப்படுகின்றனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லூர் அய்யனார் கோயில் அருகே குலமங்கலம் பிரதான ரோட்டில் 21 ,22, 23, 24, 27, 29 ஆகிய 6 வார்டுகளுக்கான கழிவுநீர் இணைப்பு பம்பிங் ஸ்டேஷன் உள்ளது. பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்லும் பிரதான கழிவுநீர் குழாய் நேற்று முன்தினம் இரவு உடைந்தது.
இதனால் தத்தனேரி, அருள்தாஸ்புரம், அய்யனார் கோயில், அஹிம்சாபுரம், மீனாம்பாள்புரம், மேலத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ரோடுகள், குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் ஓடியது. பல இடங்களில் தேங்கி துர்நாற்றம் வீசியது.
மேலும் குடிநீரிலும் கழிவு நீர் கலந்து வெளியேறியதால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் குழாய் உடைப்பு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

