ADDED : ஆக 22, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான ஆடவர் பிரிவு செஸ் போட்டிகள் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரியில் நடந்தது.
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாணவர்கள் பங்கேற்றனர். ரவுண்ட் ராபின் முறைப்படி நடந்த போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லுாரி வணிகவியல் துறை மாணவர் ஸ்ரீநிஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இக்கல்லுாரி தொடர்ந்து பத்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளது.
