sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டிஜிட்டல் கிராப் சர்வே திட்டத்தை செயல்படுத்த வி.ஏ.ஓ.,க்கள் எதிர்ப்பு தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்க வலியுறுத்தல்

/

டிஜிட்டல் கிராப் சர்வே திட்டத்தை செயல்படுத்த வி.ஏ.ஓ.,க்கள் எதிர்ப்பு தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்க வலியுறுத்தல்

டிஜிட்டல் கிராப் சர்வே திட்டத்தை செயல்படுத்த வி.ஏ.ஓ.,க்கள் எதிர்ப்பு தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்க வலியுறுத்தல்

டிஜிட்டல் கிராப் சர்வே திட்டத்தை செயல்படுத்த வி.ஏ.ஓ.,க்கள் எதிர்ப்பு தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்க வலியுறுத்தல்


ADDED : ஜன 06, 2024 06:10 AM

Google News

ADDED : ஜன 06, 2024 06:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தொழில்நுட்ப உபகரணங்களை வழங்காமல் டிஜிட்டல் கிராப் சர்வே திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அழகிரிசாமி, ராஜன்சேதுபதி கூறியிருப்பதாவது: மத்திய அரசால் அறிமுகப்படுத்தி, மாநில அரசால் செயல்படுத்த இருக்கும் டிஜிட்டல் கிராப் சர்வே திட்டத்திற்கு எவ்வித தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்காமல், முழுமையாக கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,) மூலமாகவே செயல்படுத்த நினைக்கும் தமிழக அரசை கண்டிக்கிறோம்.

பிற மாநிலங்களில் இத்திட்டத்திற்காக நிதிஒதுக்கீடு செய்து, உபகரணங்கள் வழங்கி, சிறப்பு ஊழியர்களை நியமித்து பணிமுழுவீச்சில் நடக்கிறது. ஆனால் தமிழக அரசு மட்டும் எவ்வித நிதிஒதுக்காமல், பணியை துவக்க நினைப்பது ஊழியர் நலனுக்கு எதிரானது.

உயர் அலுவலர்களின் நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள், தாலுகாக்களை பிரிக்க நினைக்கும் தமிழக அரசு, மக்கள் தொகை பலமடங்கு உயர்ந்துவிட்ட நிலையில், பரப்பளவில் அதிகமாக உள்ள கிராமங்களை பிரித்து, புதிய வி.ஏ.ஓ., பணியிடங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டாதது வருத்தத்திற்குரியது.

பணிப்பளுவில் பரிதவிக்கும் வி.ஏ.ஓ.,க்கள் மீது, தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்காமல் இப்பணியை திணிப்பது நடைமுறை சிக்கல்களை உருவாக்கும். இப்பணியை செய்ய இயலாது எனக்கூறியும், அரசு செவிசாய்க்க மறுப்பதால் அனைத்து தாலுகாக்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க எண்ணியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us