/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா
/
வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா
ADDED : ஜன 26, 2025 04:42 AM

-கள்ளிக்குடி: கள்ளிக்குடி தாலுகா வடக்கம்பட்டியில் முனியாண்டி சுவாமி கோயில் ஆண்டு திருவிழா நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2வது வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திருவிழா கொண்டாடுவர். நேற்று நடந்த இத்திருவிழாவில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மேலும் மாலையில் பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து தேங்காய் பழ தட்டுக்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள், 300க்கும் மேற்பட்ட கோழிகள் சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியில் பிரியாணி தயாரிக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டதையடுத்து பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது.

