sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'வந்துட்டாங்கய்யா... வந்துட்டாங்கய்யா...' ; மீண்டும் டவுசர் மங்கி குல்லா கொள்ளையர் n அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி

/

'வந்துட்டாங்கய்யா... வந்துட்டாங்கய்யா...' ; மீண்டும் டவுசர் மங்கி குல்லா கொள்ளையர் n அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி

'வந்துட்டாங்கய்யா... வந்துட்டாங்கய்யா...' ; மீண்டும் டவுசர் மங்கி குல்லா கொள்ளையர் n அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி

'வந்துட்டாங்கய்யா... வந்துட்டாங்கய்யா...' ; மீண்டும் டவுசர் மங்கி குல்லா கொள்ளையர் n அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி


ADDED : நவ 06, 2024 04:52 AM

Google News

ADDED : நவ 06, 2024 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : மதுரை புறநகர் பகுதியில் மீண்டும் டவுசர், மங்கி குல்லா கொள்ளையர்கள் ஊடுருவியுள்ளனர். நேற்றுமுன்தினம் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

நாகமலைபுதுக்கோட்டை ராம்கோ நகரில் நேற்றுமுன்தினம் அதிகாலை ஒரு மணியளவில் டவுசர், கையுறை, மங்கி குல்லா அணிந்து வந்த 2 பேர் ஒரு வீட்டின் கதவை சிறிய கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் உடைக்க முயற்சித்தனர். வீட்டினுள் துாங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் சத்தம் கேட்டு பார்த்தபோது, கதவின் வெளிப்பக்கம் 2 பேர் நின்று உடைக்க முயற்சித்தது அலங்கார கண்ணாடியில் தெரிந்தது.

இதுகுறித்து போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதை பார்த்து தப்பி ஓடும் அவசரத்தில் அரிவாளை விட்டுச்சென்றனர். இவர்கள் மற்றொரு வீட்டிலும் கொள்ளையடிக்க முயற்சித்தது தெரிந்தது. 'டவுசர்' கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

போலீசார் கூறியதாவது: கடந்தாண்டும் தீபாவளி சமயத்தில் புறநகர் பகுதியில் இதே ஸ்டைலில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது மீண்டும் வந்துள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். அவர்கள்தான் இந்த ஸ்டைலில் உடை அணிந்து கொள்ளையில் ஈடுபடுபவர். கையுறை அணிந்திருந்ததால் ரேகை பதிவாக இல்லை. இருப்பினும் பழைய வழக்குகளில் தொடர்புடையவர்களிடம் விசாரித்து வருகிறோம் என்றனர்.






      Dinamalar
      Follow us