ADDED : டிச 20, 2024 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோக்கள் ஓட்டுவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து நேற்றுமுன்தினம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி தலைமையில் திடீர் சோதனை நடத்தினர்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள்சேகர், எஸ்.ஐ., சவுந்தரபாண்டி, போலீசார் ஆட்டோக்களை நிறுத்தி சோதனையிட்டனர். முறையான ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்தனர்.