ADDED : ஜன 25, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, நாயக்கர்பட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்களின் சார்பில் 7 பேர் பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் டில்லி சென்றனர். அங்கு மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியிடம் டங்ஸ்டன் திட்ட பாதிப்புகள் குறித்து விளக்கினர்.
இதைதொடர்ந்து ஏலம் ரத்து செய்யப்பட்டது. நேற்று டில்லியில் இருந்து ஊர் திரும்பிய 7 பேர் அழகர்கோவிலில் தரிசனம் செய்தனர்.
பிறகு சொந்த ஊருக்கு திரும்பியவர்களை கிராமத்தினர் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.

