sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 வ.உ.சி. நினைவு தின கூட்டம்

/

 வ.உ.சி. நினைவு தின கூட்டம்

 வ.உ.சி. நினைவு தின கூட்டம்

 வ.உ.சி. நினைவு தின கூட்டம்


ADDED : நவ 20, 2025 05:23 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் வ.உ.சி., நினைவு தினத்தை முன்னிட்டு தியாகத் திருவுருவம் வ.உ.சிதம்பரனார் சமூக நலப்பேரவை சார்பில் கூட்டம் நடந்தது.

பேரவைத் தலைவர் சண்முகம் பேசுகையில் ''வ.உ.சி., தமிழுக்கு ஆற்றிய பணி அதிகம்.இலக்கியம், இலக்கணம், சைவம் தொடர்பான ஆராய்ச்சிக்காக 24 ஆண்டுகள் செலவிட்டார்.

அதை போற்றும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கு வ.உ.சி., பெயரை சூட்ட வேண்டும்'' என்றார்.

மதுரைக் காமராஜ் பல்கலை முன்னாள் பதிவாளர் அழகப்பன் பேசுகையில், ''வ.உ.சி., பன்மொழிப் புலவர்.தெல்காப்பியம் உள்ளிட்ட பல்வேறு நுால்களை பதிப்பித்துள்ளார். அவரது முழு ஆளுமையை தமிழ்ப்பணி வாயிலாக அறியமுடியும்'' என்றார்.

அரசு சார்பில் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் விருது, வ.உ.சி., பெயரில் வழங்கவேண்டும். தமிழ் வளர்க்க, அவரது பெயரில் தனித்தமிழ் கல்லுாரி துவங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக பேரவை செயலாளர் ராமசுப்பிரமணியம் தலைமையில், செயற்குழு உறுப்பினர்கள் சண்முக சுந்தரம், செந்தில்குமார், துணைச் செயலாளர் காளீஸ்வரன், தனபால், முருகேசன் உள்ளிட்டோர் சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சி., சிலைக்கு மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us