sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குடிநீருடன் கழிவு நீர்: ஐந்தாண்டு அவதி

/

குடிநீருடன் கழிவு நீர்: ஐந்தாண்டு அவதி

குடிநீருடன் கழிவு நீர்: ஐந்தாண்டு அவதி

குடிநீருடன் கழிவு நீர்: ஐந்தாண்டு அவதி


ADDED : அக் 25, 2024 05:38 AM

Google News

ADDED : அக் 25, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம்: ' மதுரை வில்லாபுரம் தென்றல் நகரில் குடிநீரில் கழிவுநீரும் கலந்து வருவதால் ஐந்தாண்டுகளாக அவதிப்படுவதாக' பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

மதுரை வில்லாபுரம் தென்றல் நகரில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மாநகராட்சி சார்பில் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

அப்பகுதியினர் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிநீருடன் கழிவு நீர் கலப்பதால் குடிநீர் கறுப்பு நிறத்தில் வருகிறது. அதில் புழுக்களும் வருவதால் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் தெருக்களில் கொட்டுகிறோம். இந்த தண்ணீரை பாத்திரம் கழுவ பயன்படுத்தினால் மலேரியா, வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிப்படைகிறோம். தனியார் லாரிகளில் குடம் ஒன்றுக்கு ரூ. 10 கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்துகிறோம். குடிநீர் பயன்படுத்தாமலேயே அதற்கென வரியும் மாநகராட்சிக்கு செலுத்துகிறோம்.

இது குறித்து கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இனிமேலும் யாரிடம் குறையை தெரிவிப்பது எனத் தெரியாமல் தவிக்கிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us