ADDED : செப் 24, 2024 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலத்தில் உள்ள திருமங்கலம் நீட்டிப்பு பாசன கால்வாயில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
பாசன கோட்டத் தலைவர் ராமன் தலைமை வகித்தார். மாவட்ட துணை சேர்மன் முத்துராமன், பன்னியான் ஊராட்சி தலைவர் காசிநாதன், விவசாய அணி மோகன் கவுன்சிலர்கள் சிவபாண்டி, சிவனாண்டி, உசிலம்பட்டி எம்.எல்.ஏ., ஐயப்பன் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டனர்.
பாசன கமிட்டி உறுப்பினர்கள் சிவ அறிவழகன் ஜெயக்குமார், முன்னாள் கவுன்சிலர் மூக்கன் பங்கேற்றனர். முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்தனர். நீரை திறந்ததும் மலர் துாவி வரவேற்றனர். நீர்வளத்துறை ஊழியர்கள் குபேந்திரன், சிங்கம், ராமு மற்றும் விவசாய சங்கத்தினர் உடனிருந்தனர்.

