ADDED : அக் 26, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 40 நாட்களாகியும் குழிச்செவல்பட்டி பகுதிக்கு தண்ணீர் திறக்கவில்லை. இதனால் நெல் நாற்றுகளை வயலில் நடமுடியாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் 11 கால்வாயில் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் நாற்று நடும் பணிகளை துவங்கினர்.