ADDED : செப் 28, 2025 02:41 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிரணி சார்பில் ஹார்விபட்டியில் 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி 102வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்தல்படி நடந்த இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார்.
மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா, கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, சிவா நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
