sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா முதல்வர்

/

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா முதல்வர்

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா முதல்வர்

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா முதல்வர்


ADDED : ஏப் 19, 2025 04:30 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல பணி நிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. சட்டசபையிலும் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின. தொடர் போராட்டங்கள் நடந்தன. பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களுக்கும் மறு வாழ்வு கிடைக்கும்.

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: பணியில் சேர்ந்த 2012 முதல் கோடை விடுமுறையின்போது சம்பளமின்றியும், அரசு சலுகைகள் இன்றியும் பணியாற்றுகிறோம். காலமுறை சம்பளம் பெற்றால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும்.

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் ரூ.12 ஆயிரத்து 500 தொகுப்பூதியம் வழங்க ஆண்டுக்கு ரூ.160 கோடி செலவாகிறது.

இதையே காலமுறை சம்பளமாக வழங்க ரூ.300 கோடி தேவைப்படும். அதனை இந்தாண்டு பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கிய ரூ.46 ஆயிரத்து 767 கோடியில் இருந்து செலவிட வேண்டும். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடப்பதை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து அறிவித்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us