ADDED : டிச 31, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கமிஷனர் கிருஷ்ணவேணி, கூடுதல் பொறுப்பாக ஜூலை முதல் மேலுார் கமிஷனராக இருந்து வருகிறார். திட்ட பணிகள் தயாரிப்பு, முடிந்த பணிகளுக்கு பில் வழங்குவது, ஆக்கிரமிப்புகளுக்கு நோட்டீஸ் வழங்குவது,
அகற்றுவது, ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட முக்கிய பணிகளை கமிஷனர் கவனித்து வருகிறார். தற்போது கிருஷ்ணவேணி எஸ்.ஐ.ஆர்., பணிக்கு இ.ஆர்.ஓ., வாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கீழக்கரைக்கும், மேலுாருக்கும் அடிக்கடி செல்வதால் இரு நகராட்சிகளிலும் அலுவல் பணிகள் பாதிக்கின்றன. இதை தவிர்க்க மேலுாருக்கு புதிய கமிஷனரை நியமிக்க வேண்டும்.

