/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அனுமதியற்ற கட்டுமானங்கள் கண்காணிப்புக்குழு எப்போது உயர்நீதிமன்றம் கேள்வி
/
அனுமதியற்ற கட்டுமானங்கள் கண்காணிப்புக்குழு எப்போது உயர்நீதிமன்றம் கேள்வி
அனுமதியற்ற கட்டுமானங்கள் கண்காணிப்புக்குழு எப்போது உயர்நீதிமன்றம் கேள்வி
அனுமதியற்ற கட்டுமானங்கள் கண்காணிப்புக்குழு எப்போது உயர்நீதிமன்றம் கேள்வி
ADDED : அக் 19, 2024 05:14 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதா, இல்லையெனில் எவ்வளவு காலவரம்பிற்குள் அமைக்கப்படும் என கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மயில்சாமி தாக்கல் செய்த பொதுநல மனு:
விதிமீறல் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் கலெக்டர்கள் தலைமையில் உயர்நிலை கண்காணிப்புக்குழு அமைக்க அரசாணை வெளியிட ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மார்ச் 1 ல் அரசாணை வெளியிட்டது. இதுவரை கண்காணிப்புக்குழு அமைக்கவில்லை.
இதனால் விதிமீறல், அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. கண்காணிப்புக்குழு அமைக்கக்கோரி மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரீசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதா, இல்லையெனில் எவ்வளவு காலவரம்பிற்குள் அமைக்கப்படும் என கலெக்டர் அக்.,25 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.